திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியின் மாநிலச் செயலாளரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேற்று(30/05/2023) சேலத்தில் அவர் தங்கியிருந்த விடுதியில் 15 பேர் கொண்ட குழுவினர் சந்தித்தோம் .
மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கீழ்பவானி கால்வாயில் சீரமைப்பு வேலைகளுக்காக வழங்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் அந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாண்புமிகு அமைச்சர்கள் சு. முத்துசாமி மு .பெ.சாமிநாதன், செந்தில் பாலாஜி போன்றவர்களின் ஒத்துழைப்பு குறித்து எடுத்துச் சொன்னோம். உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த விடாமல் அதிகாரிகளை குழப்பி வரும் திமுக மாநில சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் தமிழ்நாடு அரசின் புலம்பெயர் நல வாரியத்தின் தலைவர் என்ற பொறுப்புகளில் உள்ள கார்த்திகேய சிவ சேனாபதி அவர்களின் தவறான செயல்பாடுகள் குறித்தும் எடுத்துச் சொன்னோம். அதற்கான ஆவணங்களையும் அவரிடம் கொடுத்தோம் . குழுவினர் முன்வைத்த கருத்துக்களை கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொண்டு இந்த வேலைகள் சிறப்பாக நடைபெறுவதற்கு அரசின் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். சந்திப்பிற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏற்பாடு செய்து உதவினர் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.
கி.வே.பொன்னையன் குழுவிற்காக 01/05/2023